×

கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி பலி? ஒருவர் சடலம் மீட்பு

காரைக்கால்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி பிபிஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் 13 மாணவ, மாணவிகள் நேற்று காரைக்கால் கடற்கரைக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் மாணவர்கள் கடலில் இறங்கி குளிக்க தொடங்கினர். இதில் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் பகுதியை சேர்ந்த மாணவி ஹேமமாலினி (20), கும்பகோணம் அடுத்த திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்த ரித்தன்யா (18) ஆகியோர் முதலில் கடலில் குளிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது, திடீரென வந்த ராட்சத அலை 2 மாணவிகளை கடலுக்குள் இழுத்து சென்றது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள், 2 மாணவிகளையும் மீட்பதற்காக கடலில் இறங்கினர். இதில் மாணவர்கள் திப்பிராஜபுரம் புகழேந்தி (25), எஸ்.புத்துரை சேர்ந்த அபிலாஷ் (20) மற்றும் வலையப்பேட்டை சேர்ந்த ஜெகதீஷ் (20) ஆகிய 3 பேரும் கடல் அலையில் சிக்கிக்கொண்டனர். இதனால் மாணவ, மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு கரையில் இருந்த சக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடல் அலையில் சிக்கிய புகழேந்தி, ஹேமமாலினி மற்றும் ரித்தன்யா ஆகியோரை மீட்டனர். இதில் மாணவி ஹேமமாலினி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிமாணவர்கள் அபிலேஷ் மற்றும் ஜெகதீஸ் இருவரும் கடல் அலையில் சிக்கி கடலில் உள்ளே இழுத்து செல்லப்பட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடலில் மூழ்கி பலி? ஒருவர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Karaikal ,BBA ,Government Arts College Kumbakonam ,Thanjavur ,Karaikal beach ,Kumbakonam ,Thirunageswaram ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...