×

அண்ணாமலை நடைபயணத்தில் ரூ.2 லட்சம், செல்போன் திருட்டு

திருவண்ணாமலை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதன்படி திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். இதில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகள் 6 பேரிடம் சுமார் ரூ.2 லட்சம் வரை திருட்டு போனதாக கலசபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெண் நிர்வாகி ஒருவர் விலை உயர்ந்த ஆண்டிராய்டு செல்போன் திருட்டு போனதாக புகார் தெரிவித்தார். இதற்கிடையில் கலசபாக்கம் தாலுகா தென்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சூர்யா (24), எஸ்.எம்.நகரை சேர்ந்த ராஜேந்திரன்(46), சத்யகுமார்(38) ஆகியோர் ரூ.500 திருடியதாக மதுரையை சேர்ந்த செந்தில்குமார்(54), ராமகிருஷ்ணன்(39), சோமசுந்தரம்(42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post அண்ணாமலை நடைபயணத்தில் ரூ.2 லட்சம், செல்போன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Thiruvannamalai ,BJP ,president ,Tamil Nadu ,Kalasapakkam ,Tiruvannamalai district ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...