சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு, 2 தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்று நம்புவதாக தலைமை கழகச் செயலாளர் துரை.வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக தலைமை கழக செயலாளர் துரை.வைகோ நேற்று அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு குழு அமைத்துள்ளோம். இந்த முறை குறைந்த பட்சம் 2 தொகுதியை ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் இருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் பம்பரம் சின்னத்தில் போட்டி இடவேண்டும். இல்லையென்றால் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதனை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. வைகோ ராஜ்யசபா எம்.பி.யாக இருப்பதால் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்காது.
The post துரை.வைகோ பேட்டி மதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என நம்பிக்கை appeared first on Dinakaran.