×

டூவீலர் – வேன் மோதல் 3 வாலிபர்கள் பலி 2 பேரின் கண்கள் தானம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பார்த்திபனூரில் உள்ள தனியார் பள்ளியில் கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக மதுரை ஆனையூரை சேர்ந்த மொக்கராஜா(27), பீபிக்குளம் மணிகண்டபிரபு(24), ஆலங்குளம் கார்த்திக்(22) ஆகியோர் கட்டிடத்திலேயே தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு உணவு வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் 3 பேரும் பார்த்திபனூர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த வேன் மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மொக்க ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

உயிருக்கு போராடிய நிலையில் மணிகண்ட பிரபு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாயமடைந்த கார்த்திக், பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து பார்த்திபனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இறந்த மணிகண்ட பிரபு, கார்த்திக் ஆகியோரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

The post டூவீலர் – வேன் மோதல் 3 வாலிபர்கள் பலி 2 பேரின் கண்கள் தானம் appeared first on Dinakaran.

Tags : Paramakkudy ,Parthipanur ,Ramanathapuram ,Mokkaraja ,Bibikulam Manikandaprabu ,Alankulam Karthik ,Anyaiyur, Madurai ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்