×

பட்டியலினத்தவர்கள் கோயிலுக்குள் சென்று சாமியை தரிசித்ததால் ஊருக்கு வெளியே புதிதாக கோயில் கட்டி வழிபடும் மற்ற சமூகத்தினர்

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. பழமைவாய்ந்த இந்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து, பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என பட்டியல் இனத்தவர்கள் கடந்த ஆண்டு அப்போதைய கலெக்டர் முருகேஷிடம் மனு அளித்தனர். அதன் பின்னர் கலெக்டர், எஸ்பி இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் முத்துமாரியம்மன் கோயிலை திறந்து பட்டியல் இனத்தவர்களை சாமி வழிபாடு செய்ய வைத்தனர். அன்று முதல் காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் அறநிலையத்துறை மூலம் கோயிலைத் திறந்து பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஆனால், பட்டியல் இனத்தவர் கோயிலுக்குள் வரவேண்டாம் என எதிர்ப்பு தெரிவித மற்ற சமூகத்தினர் இந்த கோயிலுக்குள் சாமி கும்பிட செல்ல மறுத்து விட்டனர்.

இந்நிலையில் பட்டியல் இனத்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ஊருக்கு வெளியே தனியார் பட்டா இடத்தில் திடீரென அம்மன் சிலை மற்றும் அய்யனார் சிலைகளை ைவத்து கடந்த ைதப்பூசத்தன்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து அங்ேகயே 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொங்கலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து அங்கே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்கு உள்ளே சென்று பட்டியல் இனத்தவர்கள் சாமி கும்பிட்டதால் மற்ற சமூகத்தினர் தனியாக சாமி சிலை வைத்து வழிபட்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பட்டியலினத்தவர்கள் கோயிலுக்குள் சென்று சாமியை தரிசித்ததால் ஊருக்கு வெளியே புதிதாக கோயில் கட்டி வழிபடும் மற்ற சமூகத்தினர் appeared first on Dinakaran.

Tags : Sami ,Patialinas ,Thandarampatu ,Muthumariamman ,Hindu Religious Charities Department ,Thenmudiyanur Panchayat ,Thiruvannamalai District ,Pongal ,
× RELATED ராணிப்பேட்டை அருகே உள்ள...