×

மாதவரம் -நல்லூர் சுங்கச்சாவடி வரை சாத்தியக்கூறு ஆய்வு போக்குவரத்து தேவை முன்னறிவிப்பு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் முதல் நல்லூர் சுங்கச்சாவடி வரையிலான விரைவான போக்குவரத்து அமைப்பின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான போக்குவரத்து தேவை முன்னறிவிப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த பணி அல்மோன்ட்ஸ் குளோபல் இன்ப்ரா கன்சல்டன்ட் லிமிடெட் அண்டு ஃபோர் வால் கன்சல்டன்சி ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் முதல் நல்லூர் சுங்கச்சாவடி வரை 10 கி.மீ. நீளத்திற்கு விரைவான போக்குவரத்து அமைப்பின் சாத்தியக்கூறுகளுக்கான போக்குவரத்து தேவை முன்னறிவிப்பு அறிக்கையை தயாரிப்பது இப்பணியின் நோக்கம் அடங்கும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் அல்மோன்ட்ஸ் குளோபல் இன்ப்ரா கன்சல்டன்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கே.ஆர்.குமார் மற்றும் அண்டு ஃபோர் வால் கன்சல்டன்சி நிறுவனத்தின் திட்ட மேலாளர் தணிகைவேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), பொது மேலாளர்கள் ஜெபசெல்வின் கிளாட்சன், (ஒப்பந்த மேலாண்மை), ஆன்டோ ஜோஸ் மேனாச்சேரி, (சுரங்கப்பாதை), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post மாதவரம் -நல்லூர் சுங்கச்சாவடி வரை சாத்தியக்கூறு ஆய்வு போக்குவரத்து தேவை முன்னறிவிப்பு ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Madhavaram-Nallur ,CHENNAI ,Metro Rail Corporation ,Madhavaram ,Nallur toll ,Almonds Global Infra… ,Madhavaram- ,Nallur ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் நிலைய வாகன...