×

செல்போனை பறித்து தப்பியதாக பொய் புகார்: கல்லூரி மாணவருக்கு போலீசார் எச்சரிக்கை

அண்ணாநகர்: சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படிக்கின்றார். மேலும் முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பகுதி நேரமாக டெலிவரி பாயாக பணியாற்றுகிறார். நொளம்பூர் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் கல்லூரி மாணவர் கொடுத்த புகாரில்,’’முகப்பேர் பகுதியில் டெலிவரி செய்வதற்காக பைக்கில் சென்றபோது மர்ம நபர்கள் 2 பேர் என்னை வழி மடக்கி சரமாரியாக கையால் தாக்கி என்னிடம் இருந்து செல்போனை பறித்து தப்பிவிட்டனர்’ என்று தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில், போலீசார் வழக்குபதிவு செய்தனர். திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் செல்போன் பறித்து சென்றதாக பதிவாகவில்லை. ஆனால் கல்லூரி மாணவர் தனியாக பைக்கில் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து கல்லூரி மாணவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் காவல்நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை செய்தபோது மாணவர் பொய் புகார் கொடுத்துள்ளார் என்று தெரியவந்தது.

இதையடுத்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடனடியாக நொளம்பூர் போலீசாருக்கு போன் செய்து செல்போன் பறித்து சென்றதாக பொய் புகார் கொடுத்த மாணவரின் செல்போன் கிடைத்துவிட்டது என்றும் முகப்பேர் பகுதியை சேர்ந்த ஐயப்பன்(22) என்பவர் மீது மாணவரின் பைக்கில் மோதியதில் ஐயப்பன் படுகாயம் அடைந்து அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு சென்றதும் தெரிந்தது.

இதையடுத்து நொளம்பூர் போலீசார் கல்லூரி மாணவரிடம் விசாரணை செய்துவிட்டு, ‘’இனிமேல் இதுபோல் பொய் புகார் கொடுக்கக்கூடாது’ என்று எச்சரித்து அனுப்பினர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘’கல்லூரி மாணவனை தாக்கி செல்போன் பறித்ததாக வந்த புகாரை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக விசாரணை இறங்கியபோது கடைசியில் பொய்யான புகார் அளித்தது தெரியவந்துள்ளது. இதனால் மாணவரை எச்சரித்து அனுப்பினோம்’ என்றனர்.

 

The post செல்போனை பறித்து தப்பியதாக பொய் புகார்: கல்லூரி மாணவருக்கு போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Kodambakkam ,Chennai ,B.Com ,Mukappher ,Nolampur Police Station ,
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...