- வியாசர்பாடி
- பெரம்பூர்
- பாபு
- 3 வது தெரு
- வியாசர்பாடி சத்யா நகர், சென்னை
- அம்மா சத்யா நகர்
- சத்யா நகர் 1வது தெரு
பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி சத்யா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பாபு (50). இவர் பிளம்பர். நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில், அன்னை சத்யா நகர் 3வது தெரு பகுதியில் நின்றிருந்தபோது சத்யா நகர் 1வது தெருவை சேர்ந்த ரவுடி தேவராஜ் (23) என்பவர் வந்து பாபுவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர், ‘’ஏரியாவில் நாங்கள் மது குடிக்கும்போதும் கஞ்சா புகைக்கும்போதும் நீ தான் போலீசுக்கு தகவல் சொல்கிறாயா’’ என கேட்டு வாக்குவாதம் செய்ததுடன் தான் வைத்திருந்த பிளேடை எடுத்து பாபுவின் கழுத்தில் கிழித்துள்ளார். அவருக்கு ரத்தம் கொட்டியதால் மயக்கம் அடைந்த அவரை உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, எம்கேபி.நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து தேவராஜை கைது செய்து விசாரித்துவிட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மது குடிப்பது, கஞ்சா புகைப்பது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்த பிளம்பருக்கு சரமாரி வெட்டு: வியாசர்பாடி ரவுடி கைது appeared first on Dinakaran.