×

அண்ணல் மறைந்த இந்நாள், ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் இந்தியா ஒன்று திரள உறுதியேற்க வேண்டிய நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : அண்ணல் மறைந்த இந்நாள், ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் இந்தியா ஒன்று திரள உறுதியேற்க வேண்டிய நாள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி மறைந்த தினமான இன்று இந்தியாவில் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்திய தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள் 1948ம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி மாலை சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் இந்தியா ஒன்று திரள உறுதியேற்க வேண்டிய நாள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“சமூகவலைத்தள பக்கத்தில், “உண்மை – அமைதி – மதநல்லிணக்கம் ஆகியவற்றை விரும்பிய அண்ணல் காந்தியார் அவர்களை இந்திய மண்ணில் நிலவும் பன்முகத்தன்மைக்கு எதிரான கருத்தியல் கொன்ற நாள் இது! காந்தியாரின் உயிரைத்தான் அந்த மனிதவிரோதக் கும்பலால் பறிக்க முடிந்ததே தவிர; அவர் நம்மிடையே விதைத்த சகோதரத்துவத்தை அல்ல!

அண்ணல் மறைந்த இந்நாள், ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் இந்தியா ஒன்றுதிரள உறுதியேற்க வேண்டிய நாள்! இதனை மதநல்லிணக்க நாளாக கடைப்பிடித்து, தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர், அனைத்துச் சமயங்களைச் சேர்ந்த பெரியோர், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர். உறுதியேற்போம்… சமத்துவ இந்தியாவை உறுதிசெய்வோம்!, என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post அண்ணல் மறைந்த இந்நாள், ஆதிக்க வல்லூறுகளுக்கு எதிராக நம் இந்தியா ஒன்று திரள உறுதியேற்க வேண்டிய நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : India ,K. Stalin ,Chennai ,Annal ,Mahatma Gandhi ,Martyrs' Day ,
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...