- ரகுல்கந்தி
- பீகார் மாநிலம்
- மலர்
- கந்தியாடி
- நினைவு ஆண்டு
- பாட்னா
- காங்கிரஸ்
- பீகார்
- ராகுல் காந்தி
- காந்தி நினைவு நாள்
- மலர்துவி
- மணிப்பூர்
- மும்பை
- ரகுலகந்தி நீதிபதி
- மகார்தூவி
- தின மலர்
பாட்னா: பீகார் மாநிலத்தில் 2வது நாளாக ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி மலர்தூவி மரியாதை செலுத்தினார். ராகுல் காந்தியின் மணிப்பூர் முதல் மும்பை வரையிலான ஒற்றுமை நீதி பயணம் நேற்று பீகார் மாநிலத்தை எட்டியது. இன்று அவர் ஆராரியா மாவட்டத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். முன்னதாக காந்தியடிகளாரின் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு ராகுல் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் காந்தியடிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து ராகுல் காந்தி ஆராரியாவில் இருந்து தனது பயணத்தை தொடர்ந்தார். அவருடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் சென்றனர். பின்னர் பூர்ணியா பகுதியில் விவசாயிகளை சந்தித்து பேசிய ராகுல், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். நாளை காத்திஹார் மாவட்டத்தில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதிக்கம் அதிகம் உள்ள மாவட்டம் என்பதால் பீகாரில் பரபரப்பு நிலவுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த நிதிஷ்குமார் தற்போது பாரதிய ஜனதா கூட்டணிக்கு தாவியுள்ள சூழலில் பீகாரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதிபயணம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பீகார் மாநிலத்தில் 2-வது நாளாக ராகுல்காந்தி நீதி யாத்திரை: காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி மலர்தூவி மரியாதை..!! appeared first on Dinakaran.