×

விவசாயிகளின் அச்சத்தை போக்க மத்திய அரசு தவறிவிட்டது : ராகுல்காந்தி

பாட்னா : விவசாயிகளின் அச்சத்தை போக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பூர்னியாவில் விவசாயிகளுடன் உரையாடிய ராகுல்காந்தி ,”அனைத்துத் திசைகளிலிருந்தும் விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். உங்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு அதானி போன்ற பெரிய தொழில் அதிபர்களுக்கு பரிசாக வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி 3 கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வர முயற்சித்தார், ஆனால் நாட்டின் அனைத்து விவசாயிகளும் அதற்கு எதிராக நின்றது பெருமைக்குரியது.கோடீஸ்வரர்களின் ₹14 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டாலும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை, ‘இவ்வாறு பேசினார்.

The post விவசாயிகளின் அச்சத்தை போக்க மத்திய அரசு தவறிவிட்டது : ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Tags : Central government ,Rahul Gandhi ,Patna ,Congress ,Purnia, Bihar ,Adani ,
× RELATED மாற்றத்தின் புயல் நாடு முழுவதும்...