×

6,244 காலிப்பணியிடங்கள்.. ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப்-4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வி.ஏ.ஒ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை குரூப்-4 தேர்வு நடைபெறும். குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.28-ம் தேதி கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது. குரூப்-4 தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதன்படி, விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இதற்காக விண்ணப்பம் செய்வோர், www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை நன்றாக படித்து கொள்ள வேண்டும். அவர்கள், தேர்வுக்கான அனைத்து தகுதி வாய்ந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறோம் என உறுதி செய்து கொள்ள வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

The post 6,244 காலிப்பணியிடங்கள்.. ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : 4 ,DNBSC ,Chennai ,Tamil Nadu Civil Servants Selection Board ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...