×

உழவன் செயலியை பதிவேற்றம் செய்து பல தகவல்களை பெற்று பயன்பெறலாம்

வலங்கைமான்: வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உழவன் செயலியை விவசாயிகள் பதிவேற்றம் செய்து பயன்பெற வேளாண்மை துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறை பல்வேறு வேளாண் விரிவாக்க சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து விவசாயிகளிடமும் கைபேசி உள்ளதால், வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் உழவன் செயலி.

The post உழவன் செயலியை பதிவேற்றம் செய்து பல தகவல்களை பெற்று பயன்பெறலாம் appeared first on Dinakaran.

Tags : Walangaiman ,Department of Agriculture ,
× RELATED நாட்டுப் பசுவில் நன்மைகள் அதிகம்: வேளாண்துறை தகவல்