கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் தஞ்சை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் ஒரங்களிலும், இரு வழி சாலையை பிரிக்கும் வெள்ளை நிற கோடு போடும் பணி நடைபெற்றது. வாகன ஓட்டிகளுக்கு சாலையில் அளவு இரவு நேரங்களில் தெரியவும், முறையாக வாகனத்தை இயக்கவும் சாலையை பாதசாரிகள் குறுக்கே கடக்கவும் முறையாக வெள்ளை கோடு அமைத்து வருகிறார்கள். மேலும் வெள்ளை நிறக்கோடு போட பயன்படுத்தும் ஒரு வகை ப்ளாஸ்டிக் பவுடரை வெப்பத்தில் உருக்கி அது உருகிய நிலையில் சாலையில் கோடு போடும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
The post கந்தர்வகோட்டை பகுதி தேசியநெடுஞ்சாலையில் வெள்ளை நிறக்கோடு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம் appeared first on Dinakaran.