×

மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளுடன் 150 புதிய பேருந்து

சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்துவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 150 புதிய தாழ்தள பேருந்துகளை ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளின் வாயிலாக தமிழ்நாடு அரசு போக்குரவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் போக்குவரத்து சேவைகள் தமிழகத்தை முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளுடன் 150 புதிய பேருந்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Transport Minister ,Sivasankar ,Tamil Nadu Government Transport Corporations ,Dinakaran ,
× RELATED வெயிலில் இருந்து போக்குவரத்து...