×

காணாமல் போன மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை குடியாத்தம் அருகே

குடியாத்தம்: குடியாத்தம் அருகே 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பிளஸ் 2 மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுப்பிரமணி மகள் அனிதா(17). அரசு பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனிதா கடைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அனிதா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான அனிதாவை தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அனிதா சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post காணாமல் போன மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Subramani ,Kalleri ,Kudiatham, Vellore district ,Kudiatham ,Dinakaran ,
× RELATED ‘ரீல்ஸ்’ மோகத்தில் மனைவி கையை வெட்டிய கணவன்