×

அரசு பள்ளிக்கு பூட்டு போட முயன்ற கிராம மக்கள் அணைக்கட்டு அருகே பரபரப்பு தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி அரசு பள்ளிக்கு பூட்டு போட முயன்ற கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, கோவிந்த ரெட்டிபாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 13 ஆசிரியர்கள் பணியாற்றி வந்த நிலையில், அடுத்தடுத்து 10 ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு பணியிட மாறுதலாகி சென்றுவிட்டனர். இதனால் பாடம் எடுக்க போதிய ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர் உட்பட கிராம மக்கள் தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, அவர் சரியாக பதில் அளிக்கவில்லையாம். மேலும், மாணவர்களின் நடவடிக்கையை சரிவர கண்காணிக்கவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

The post அரசு பள்ளிக்கு பூட்டு போட முயன்ற கிராம மக்கள் அணைக்கட்டு அருகே பரபரப்பு தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி appeared first on Dinakaran.

Tags : Govinda ,Reddipalayam Village ,Amgakattu Taluk ,Vellore District ,Govt High School ,Dinakaran ,
× RELATED கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்...