×

போலீஸ் விசாரணை வேட்டவலம் அருகே

வேட்டவலம்: வேட்டவலம் அருகே தைப்பூச திருவிழாவுக்காக வந்த மும்பையை சேர்ந்த இளம்பெண் காணாமல் போனதாக பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே உள்ள கிராமத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் தைப்பூச விழாவிற்கு மும்பையில் இருந்து கடந்த வாரம் சொந்த கிராமத்திற்கு வந்துள்ளனர். கடந்த 27ம் தேதி அந்த குடும்பத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவரை அவரது பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடு என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து அவர்கள் வெறையூர் காவல் நிலையத்தில் நேற்று கொடுத்த புகாரின்பேரில் எஸ்.ஐ ஏசுராஜ் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை யாராவது கடத்தி சென்றார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

The post போலீஸ் விசாரணை வேட்டவலம் அருகே appeared first on Dinakaran.

Tags : Vettavalam ,Mumbai ,Thaipusa festival ,Thiruvannamalai district ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!