×

பிடிவாரண்ட் பிறப்பித்தும் திருட்டு வழக்கில் வாலிபர் தலைமறைவு: நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

 

நாகர்கோவில், ஜன.30: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்கு யாதவர் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் முருகன் (30). இவர் மீது நாகர்கோவில் ரயில்வே போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் நடந்து வருகிறது. வழக்கில் முருகன் ஆஜர் ஆகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.

அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இருப்பினும் அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இது குறித்து ரயில்வே போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை ஏற்று, முருகன் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு பிரகடனப்படுத்தப்படுகிறது. அதன்படி வருகிற 5.2.2024 அன்று காலை 10.30க்கு நீதித்துறை நடுவர் எண் 1 நீதிமன்றத்தில் முருகன் ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் முருகன் வீட்டிலும் ஒட்டப்பட உள்ளது என போலீசார் கூறினர்.

The post பிடிவாரண்ட் பிறப்பித்தும் திருட்டு வழக்கில் வாலிபர் தலைமறைவு: நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Isakimuthu ,Valliyur South Yadav Street, Tirunelveli District ,Murugan ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...