×

விழுப்புரத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

 

விழுப்புரம், ஜன. 30: விழுப்புரத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தை சேர்ந்த முருகன், அவரது மனைவி பத்மாவதி, சபரிவாசன், மித்ரா, கணேசன் உள்ளிட்டவர்கள் பழனி என்பவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். மாதா கோவில் என்ற இடத்தில் சென்ற போது சாலையோரம் நின்றிருந்த மீன்பாடி வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நகர காவல்நிலைய போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விழுப்புரத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Murugan ,Padmavathy ,Sabarivasan ,Mitra ,Ganesan ,Palani ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...