×

பைக் மோதியதில் தகராறு வாலிபரை தாக்கி செயின் பறித்த கும்பல்

 

கோவை, ஜன. 30: கோவையில் பைக் மோதியதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கி செயின் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோவை குனியமுத்தூர் சின்னசாமி பன்னாடி தெருவை சேர்ந்தவர் ரகுவரன் (38). இவர் கடந்த 27ம் தேதி தனது பைக்கில் கோபாலன் என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் அத்திப்பாளையம் ரோடு ஓம் சாந்தி நகர் ஜங்சனில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர் ரகுவரனின் பைக் மீது மோதினர். இதில் கோபாலன் கீழே விழுந்தார்.

இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும் போனில் பேசி மேலும் 2 பேரை அங்கு வரவழைத்தனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து ஹெல்மெட்டால் ரகுவரனை தாக்கினர். இதில் அவருக்கு மூக்கு, கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து 4 பேரும் ரகுவரனை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயினை பறித்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து ரகுவரன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கி செயின் பறித்த 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

The post பைக் மோதியதில் தகராறு வாலிபரை தாக்கி செயின் பறித்த கும்பல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Raghuvaran ,Chinnaswamy Bannadi Street, Kuniyamuthur, Coimbatore ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...