×

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் காய்கறிகள்

ராயக்கோட்டை: ராயக்கோட்டை பகுதிகளில் இருந்து, காய்கறி வகைகள் வெளிநாடுகளுக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், ஊட்டிக்கு அடுத்தபடியாக ராயக்கோட்டை பகுதிகளில் இதமான சீதோஷ்ண நிலை இருப்பதால், ஊட்டியில் விளைச்சலாகும் ஆங்கில காய்கறிகள் உள்பட அனைத்து வகை காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. கேரட், உருளை கிழங்கு, அவரை, முட்டைகோஸ், பீன்ஸ் உள்பட அனைத்து வகையான ஆங்கில காய்கறிகள், அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநில வியாபாரிகள், நேரடியாக இங்கு வந்து வாங்கிச் சென்று விற்பனை செய்து வந்தனர். சமீபகாலமாக, வெளிநாடுகளுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது. அதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

The post வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் காய்கறிகள் appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,Tamil Nadu ,Ooty ,
× RELATED பச்சை மிளகாய் சாகுபடி அதிகரிப்பு