×

தேர்வுக்கு பயந்து கடலில் குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை

புதுச்சேரி: கடலூர் ஆல்பேட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் கவுதம். தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் நிதிஷ் (22). இவர் புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து புறப்பட்ட நிதிஷ் கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் புதுச்சேரி அம்பேத்கர் மணிமண்டபம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் மாணவர் ஒருவர் உடல் கரை ஒதுங்கி இருப்பதாக பெரிய கடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அதில், தற்கொலை செய்து கொண்டவர் காமராஜர் நகரை சேர்ந்த நிதிஷ் என்பது தெரியவந்தது.முதற்கட்ட விசாரணையில், மாணவர் நிதிஷ் படிக்கும் மருத்துவ கல்லூரியில் நேற்று தேர்வு துவங்கியுள்ளது. இத்தேர்வுக்கு அவர் தயாராகாததால் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் தேர்வு எழுதினால் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

The post தேர்வுக்கு பயந்து கடலில் குதித்து மருத்துவ மாணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Gautham ,Kamarajar Nagar, ,Albate, Cuddalore ,Nitish ,MBBS ,Krumambakkam, Puducherry ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு