×

இட ஒதுக்கீடு விவகாரத்தில் சர்ச்சை யுஜிசி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவது குறித்த வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்ப்பு காரணமாக பல்கலைக்கழக மானியக்குழு அதன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியது. ஒன்றிய அரசும் விளக்கமளித்தது.

அதன் காரணமாக சமூகநீதி தொடர்பான சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. அதே நேரத்தில் தேவையே இல்லாமல் இத்தகைய சர்ச்சை எழுப்பப்பட்டது ஏன், அதிகார வரம்பை மீறி அத்தகைய சர்ச்சையை ஏற்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழு மீது என்ன நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுக்கப் போகிறது என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும்.தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்திய யுஜிசி நிர்வாகிகள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேன்கூட்டில் கல் வீசுவதற்கு ஒப்பான செயல்களில் எந்த அமைப்பும் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கிறேன்.

The post இட ஒதுக்கீடு விவகாரத்தில் சர்ச்சை யுஜிசி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,UGC ,CHENNAI ,BAMA ,University Grants Committee ,Dinakaran ,
× RELATED ராகிங்கை தடுக்காவிட்டால் நடவடிக்கை...