×

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

சென்னை: தங்க நகைகளை மதிப்பீடு செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 5.2.2024 முதல் 14.2.2024 தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி, பிளாட்டினம் ஆகிய உலோக தரம் அறிதல் உரைகல் பயன்படுத்தும் முறை, கேரட் மற்றும் கேரட், தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை, ஆசிட் பயன்படுத்துதல் எடை அளவு இணைப்பான், தங்கம் 999%, 916%, 85%, 80%, 75% தரம் அறிதல் ஆபரண கடனுக்கான கணக்கீட்டு முறை ரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள், ஹால் மார்க் தங்க அணிகளன்கள், ஆபரண வகைகள் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அதற்கான வழிமுறைகள் ஆகியவை கற்றுத்தரப்படும்.

மேலும், பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணி பற்றியும், அவைகளை பெறும் முறைகளை பற்றி ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும். பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுதாங்கல், சென்னை – 600 032 என்ற முகவரியில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu government ,Entrepreneurship Development and Innovation Institute ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...