×

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தொடர்பான ஆளுநர் ரவியின் கருத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி

சென்னை: பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தொடர்பான ஆளுநர் ரவியின் கருத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி கொடுத்துள்ளார். நாகை மாவட்டம் வெண்மணி ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 127 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 127 பயனாளிகளில் இதுவரை 75 பயனாளிகள் வீடுகளை கட்டி கட்டி முடித்துள்ளனர். மீதமுள்ள 52 பயனாளிகளால் வீடுகள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட அதிக தொகை வழங்கப்படுகிறது என ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

The post பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தொடர்பான ஆளுநர் ரவியின் கருத்துக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Minister ,H.E. ,Governor ,Ravi ,Peryasami ,Chennai ,I. Peryasami ,Nagai district ,I. Peryasami Vengiladi ,
× RELATED விராலிமலையில் பட்டாசு கிடங்கில்...