×

அமெரிக்காவில் எம்பிஏ பட்டதாரியான இந்திய மாணவர் சுத்தியால் அடித்து கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் எம்பிஏ படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர், மற்றொரு நபரால் சுத்தியால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வசித்து வந்த இந்திய மாணவரான எம்பிஏ பட்டதாரி விவேக் சைனி (25) என்பவர், ஸ்னாப்ஃபிங்கர் மற்றும் கிளீவ்லேண்ட் சாலையில் உள்ள செவ்ரான் ஃபுட் மார்ட்டில் உள்ள கடையில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார். இந்திய மாணவர் தங்கியிருந்த அறையில், மேலும் ஒரு சில நண்பர்களும் தங்கியிருந்தனர்.

அவர்களில் ஒருவரான ஜூலியன் பால்க்னர் (53) என்பவர், இந்திய மாணவரிடம் போர்வை ஒன்று கேட்டுள்ளார். அதற்கு இந்திய மாணவர் தன்னிடம் போர்வை இல்லை என்று கூறினார். பின்னர் தன்னிடம் இருந்த ஒரு ஆடையை கொடுத்தார். இதற்குள் இந்திய மாணவரிடம் சண்டையிட்ட ​​பால்க்னர், அவரை சுத்தியலால் தாக்கிக் கொன்றார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் இந்திய மாணவரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், இந்திய மாணவரின் முகம் மற்றும் தலையில் சுமார் 50 முறை சுத்தியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் இறந்ததாக கூறினர்.

The post அமெரிக்காவில் எம்பிஏ பட்டதாரியான இந்திய மாணவர் சுத்தியால் அடித்து கொலை appeared first on Dinakaran.

Tags : USA ,Washington ,US ,Vivek Saini ,Georgia, USA ,
× RELATED கடும் போக்குவரத்து நெரிசலால் விபத்து:...