×

திருக்குறள் பேரவையம் தொடக்க மாநாடு: திருமாவளவன் எம்பி பங்கேற்பு

 

திண்டுக்கல், ஜன. 29: திண்டுக்கல்லில் திருக்குறள் பேரவையம் தொடக்க மாநாடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி பேகம்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களின் ஊர்வலம் நடந்தது. பின்னர் மாநாட்டில் திருக்குறள் காட்சியகம், திருக்குறள் அறிஞர்கள் கருத்தரங்கு நடந்தது. அதை தொடர்ந்து மாலையில் தமிழக மக்கள் முன்னணி தலைவர் பொழிலன் தலைமையில் பொது அரங்கு நடைபெற்றது. மாநாட்டு அமைப்பாளர் கழராம்பன் வரவேற்றார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மாநாட்டில் திருக்குறள் கூறி ஒரு ஜோடிக்கு திருமணம் நடத்தப்பட்டது. இதில் திரைப்பட இயக்குனர் சேகர், திண்டுக்கல் மேயர் இளமதி, திருவள்ளுவர் இலக்கிய பேரவை தலைவர் முருகையா, செயலாளர் கணேசன், விடுதலைச் சிறுத்தை கட்சி மாநகர செயலாளர் மைதீன் பாவா, திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் வீரபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாநாட்டு பொருளாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

The post திருக்குறள் பேரவையம் தொடக்க மாநாடு: திருமாவளவன் எம்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Tirukkural Assembly Inaugural Conference ,Thirumavalavan ,Dindigul ,Tirukkural Parish ,Thiruvalluvar ,Begumpur ,Thirukkural Gallery ,Thirukkural Assembly Inaugural Conference ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...