×

மாமல்லபுரத்திற்கு வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

 

மாமல்லபுரம், ஜன.29: மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க அக்டோபர் முதல் மார்ச் வரை 6 மாதங்கள் சீசன் காலம் என்பதால், வெளிநாட்டு பயணிகள் தினமும் சொகுசு பஸ் மற்றும் கார்களில் குவிந்து வருகின்றனர். மேலும், இவர்களுக்கு இணையாக தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநில சுற்றுலாப் பயணிகள் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.  அப்படி, வருபவர்கள் அரசு பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர்.

தொடர்ந்து, அவர்கள் புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு வீடு திரும்பிச் செல்வதற்கு போதிய பேருந்துகள் இல்லாததால், நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உனடியாக தலையிட்டு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மாமல்லபுரத்திற்கு சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரத்திற்கு வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்