×

‘சரக்கு சிட்டி’யில் அட்ராசிட்டி போதையில் நிக்க முடியாமல் சாலையில் மயங்கிய ‘குடிமகள்’: தூக்க முடியாமல் தவித்த ஆண் நண்பர்

புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம், விதவிதமான 500க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், பார்கள், ரெஸ்டோ பார்கள், பப்கள் உள்ளன. வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நள்ளிரவு வரை பப் மற்றும் ரெஸ்டோ பார்களில் குடித்துவிட்டு போதையில் நகரில் உலா வருவதால், அதிக விபத்துகள் மட்டுமின்றி பல்வேறு சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகின்றன. இளம்பெண்கள் பலர் போதை தலைக்கேறி பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது அதிகரித்துள்ளது. அந்த வகையில், குடியரசு தின தொடர் விடுமுறையையொட்டி தனது ஆண் நண்பருடன் புதுச்சேரிக்கு வந்த இளம் பெண் ஒருவர் செட்டித்தெருவில் உள்ள பப்பில் மது அருந்தி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அந்த இளம் ஜோடி பப்பை விட்டு வெளியே வருகின்றனர்.

அப்போது அந்த இளம்பெண் உச்சக்கட்ட போதையில், நிதானம் இல்லாமல் பப் வெளியே உருண்டு புரள்கிறார். அவருடன் வந்த ஆண் நண்பர் அந்த இளம்பெண்ணை அழைத்து செல்ல நீண்ட நேரமாக முயற்சி செய்கிறார். முடியாத நிலையில் அந்த பெண்ணை தரையில் உட்கார வைக்கிறார். ஆனால் உட்கார முடியாமல் அந்த பெண் மயங்கி கிடக்கிறார். தனி ஆளாக பெண்ணை தூக்க முடியாமல் தவித்த ஆண் நண்பர், ஒருகட்டத்தில் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை அவர் ஆட்டோவில் ஏற்றிச் செல்கிறார். இந்த வீடியோ ‘ஒரு பண்பாடு இல்லாவிட்டால் பாரதம் இல்லை’ என்ற பாடலுடன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ‘சரக்கு சிட்டி’யில் அட்ராசிட்டி போதையில் நிக்க முடியாமல் சாலையில் மயங்கிய ‘குடிமகள்’: தூக்க முடியாமல் தவித்த ஆண் நண்பர் appeared first on Dinakaran.

Tags : Saraku City ,Puducherry ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாக்க...