- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நுங்கம்பாக்கம்
- கடலூர்
- திருவள்ளூர்
- கோயம்புத்தூர்
சென்னை: பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும், காலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கம், கடலூர், திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வட தமிழகத்தில் சில இடங்களில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இன்று வறண்ட வானிலை காணப்படும். காலையில் பனி மூட்டம் காணப்படும். இது 4 நாள் நீடிக்கும்.
The post காலையில் பனி-பகலில் வெயில்: 4 நாள் நீடிக்கும் appeared first on Dinakaran.