×

நீதி யாத்திரையில் வருவது ராகுல் காந்தியின் டூப்: அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

கவுகாத்தி: நீதி யாத்திரையின் போது ராகுல் காந்தியை போன்ற உருவ ஒற்றுமை கொண்ட டூப்பை காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது என அசாம் முதல்வர் கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை தொடங்கினார். அசாாமில் நடந்த யாத்திரையின் போது நடந்த பொதுக்கூட்டங்களில் பேசிய ராகுல் இந்தியாவில் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா நேற்றுமுன்தினம் கூறுகையில்,‘‘ யாத்திரையில் பஸ் மீது அமர்ந்து கொண்டு ஒருவர் மக்களை பார்த்து கையசைப்பவர் ராகுல் காந்தியே இல்லை. ராகுல் காந்தி பஸ் மீது அமர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. ராகுல் காந்தியை போல் தோற்றம் கொண்ட டூப் ஒருவர் பஸ் மீது அமர்ந்திருந்தார் என்று செய்திகள் வந்துள்ளன. இன்னும் சில நாட்கள் பொறுத்திருங்கள். அந்த டூப் யார் என்ற விவரங்களை வெளி யிடுவேன் ’’ என்றார்.

The post நீதி யாத்திரையில் வருவது ராகுல் காந்தியின் டூப்: அசாம் முதல்வர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : justice ,Rahul Gandhi ,Assam ,chief minister ,Guwahati ,Congress ,Manipur ,India ,
× RELATED பிரதமர் மோடியின் நண்பர்களிடம்...