டெல்லி: உயர் கல்வி நிறுவனங்களின் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டு இடங்களில் தகுதியானோர் இல்லாவிடில் பொதுப்பிரிவு இடங்களை நிரப்பலாம் என யுஜிசி அறிவித்திருந்தது. யுஜிசியின் அறிவிப்பு இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் சதி என கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவிப்புக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
The post உயர் கல்வி நிறுவனங்களின் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் மறுப்பு appeared first on Dinakaran.