×

அண்ணாவின் 55வது நினைவு நாள்: பிப்ரவரி 3ம் தேதி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப்பேரணி!

சென்னை: சென்னையில் அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி பிப்ரவரி 3ம் தேதி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெறும் என சென்னை மாவட்ட செயலாளர்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில்; அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முன்னணியினர் பிப்ரவரி 3ம் தேதி காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள். அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.

இந்நாளில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக, பகுதிக்கழக, வட்டக்கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, ஆதிதிராவிடர் நல உரிமைப்பிரிவு, மீனவர் அணி, கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை உள்ளிட்ட அனைத்து அணியினரும் அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post அண்ணாவின் 55வது நினைவு நாள்: பிப்ரவரி 3ம் தேதி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப்பேரணி! appeared first on Dinakaran.

Tags : Anna's 55th Remembrance Day ,Dimuka ,Secretary General ,Duraimurugan ,Chennai ,District Secretaries ,Anna ,Thuraimurugan ,Secretaries ,District ,of Chennai ,Anna's 55th Remembrance Day: ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...