×

தென்காசியில் அதிகாலை நடந்த சாலை விபத்து: 6 பேர் உடல் நசுங்கி பலி

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடிக்கும் – புன்னையாபுரத்திற்கும் இடையே திருமங்கலம் – கொல்லம் நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தானது இன்று அதிகாலையில் நடந்தது. விபத்து குறித்து மீட்புபடைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கபட்டது. விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட தகவலின் அடிப்படையில் இந்த விபத்தில்கார்த்திக் (28), வேல் மனோஜ் (24), சுப்பிரமணியன் (27), மனோ சுப்ரமணியம் (17) உள்ளிட்ட 6 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த 6 பேரும் குற்றலத்திற்கு சுற்றுளா சென்று திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது

The post தென்காசியில் அதிகாலை நடந்த சாலை விபத்து: 6 பேர் உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.

Tags : Early morning road accident ,Tenkasy ,Tenkasi ,Thirumangala ,Kollam Highway ,Puliankudi ,Punnaiapuram, Tenkasi district ,morning ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...