- எடப்பாடி
- Thiruverumpur
- எடப்பாடி பழனிச்சாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எதிர்க்கட்சி தலைவர்
- அஇஅதிமுக
- பொது
- திருச்சி
- மதுரை
- வடக்கு மாவட்ட அ.தி.மு.க
- திருச்சி மணிகண்டம்
திருவெறும்பூர்: திருச்சி மணிகண்டம் அருகே வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரையில் இருந்து திருச்சிக்கு வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க பல மணி நேரமாக கால் எடுக்க காத்திருந்த தொண்டர்கள் விரக்தி அடைந்தனர். தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று (28ம் தேதி) தஞ்சை மற்றும் கும்பகோண பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை மதுரையிலிருந்து திருச்சிக்கு வருகிறார் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், திருச்சி மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் பகுதிக்கு தொண்டர்கள் திரண்டனர். இரவு 7 மணிக்கு வந்துவிடுவார் என கூறி மேளதாளம், தாரதப்பட்டைகளும் முழங்க வான வேடிக்கையுடன் வரவேற்பு அளிக்க தொண்டர்கள் காத்திருந்தனர்.
The post கால்கடுக்க காத்திருந்ததால் விரக்தி 3 மணி நேரம் காக்க வைத்த எடப்பாடி appeared first on Dinakaran.