- துவரங்குறிச்சி
- மதுரை
- சென்னை
- சோரியம்பட்டி
- திருச்சி மாவட்டம்
- குருசுவாமி
- நாராயணன்
- எக்வாலைமுக்கி கிழக்கு தெரு
- திருநெல்வேலி மாவட்டம்
- தின மலர்
துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த சொரியம்பட்டி என்னும் பகுதியில் மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை 40 பயணிகளுடன் தனியார்ஆம்னி பேருந்து புறப்பட்டது. பேருந்தை திருநெல்வேலி மாவட்டம் எழுவலைமுக்கி கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் நாராயணன் (30) ஓட்டிச்சென்றார். பேருந்து திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை சொரியம்பட்டி அருகே வந்தபோது, மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் Road closed என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்ததை கவனிக்காமல், அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டியதால் பேருந்து தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தார் டின்னில் மோதியது. மேலும் அங்கிருந்த மண் மேட்டின் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் அருகே படுத்திருந்த தென்காசி மாவட்டம் தெற்குகடையம் ஊராட்சி முதலியார்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பக்கீர் மைதீன் சர்புதீன் என்பவருடைய மகன் கிளீனர் மைதீன் ரிகான் (22) என்பவர் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே விழுந்ததில் பஸ்ஸின் முன்பக்க டயர் எதிர் பாராத விதமாக அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சென்னை காட்டுப்பாக்கம் அக்ரோ நகர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி ஜனனி (26), தூத்துக்குடி சாத்தான்குளம் தாலுகா பழங்குளம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் மகன் வெற்றிகுமார் (40) ஆகியோர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் பஸ் கண்ணாடியை உடைத்துக்கொண்டு விழுந்த வாலிபர் சக்கரத்தில் சிக்கி சாவு எச்சரிக்கை போர்டு சரியாக வைக்காததால் விபரீதம் appeared first on Dinakaran.