×

திண்டுக்கல்லில் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்க குழுவினர் உண்ணாவிரதம்

திண்டுக்கல், ஜன. 28: திண்டுக்கல்லில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பிரபாகரன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஆர்தர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் கோபிநாதன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சண்முகம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஆல்பர்ட் டென்னிஸ் தலைமை வகித்தனர்.

உண்ணாவிரத போரா ட்டத்தை தமிழ்க ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் துவக்கி வைத்தார். போராட்டத்தில் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை கலைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பழைய நடை முறையிலேயே இருக்க வேண்டும். அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் துரைராஜ், தெய்வசிகாமணி, ஜேம்ஸ் அந்தோணி தாஸ், கேந்திர மூர்த்தி, நடராஜன், ஜோசப் அமல்ராஜ், கணேஷ் பிரபு உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி துணை பொது செயலாளர் கணேசன் முடித்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

The post திண்டுக்கல்லில் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்க குழுவினர் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Dindigul elementary school ,Dindigul ,Joint Action Committee of Tamil Nadu Primary Education Teachers' Movements ,Prabhakaran ,District ,President ,Tamil Nadu Primary School Teachers' Alliance ,Tamil Nadu Teachers' Alliance District ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...