×

அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு கூடுதல் போலீசாரை நியமிக்க கோரிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல் சரக எல்லைக்குட்பட்ட தாய் கிராமங்கள் 26, குக்கிராமங்கள் 53 என்று 79 கிராமங்கள் உள்ளன. திருவாரூர் மாவட்ட எல்லையான பல்லவராயன்பேட்டையில் துவங்கி தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பைபாஸ் ரோடு வரை பரந்து விரிந்து பகுதியாக அம்மாபேட்டை காவல்சரக எல்லை உள்ளது. கடந்த காலங்களை விட கூடுதலான மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு போதுமான காவலர்கள் இல்லாமல் உள்ள நிலை உள்ளது. போதுமான காவலர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

The post அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு கூடுதல் போலீசாரை நியமிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ammapet police station ,Thanjavur ,Ammapet Police Constabulary ,District ,Tiruvarur district ,Pallavarayanpet ,Thanjavur Pattukottai Bypass Road ,Ammapet ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...