×

கந்தர்வகோட்டை பகுதியில் உளுந்து பிரித்து எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் விவசாயிகள் தற்சமயம் விவசாய பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் நெல் நடவு, கடலை சாகுபடி, உளுந்து சாகுபடி, நெல்லுக்கு பின் பயிர் சாகுபடி என உள்ள நிலையில் ஐப்பசி மாத கடைசியில் பயிர் செய்த உளுந்து பயிர் தற்சமயம் முதிர்ச்சி அடைந்து மகசூல் எடுத்து வருகிறார்கள். உளுந்து பயிர் பற்றி விவசாயிகள் கூறும் போது ஏக்கர் ஒன்றுக்கு மூன்று குவிண்டால் முதல் நான்கு குவிண்டால் மகசூல் கிடைக்கும் எனவும் குறைந்த காலத்தில் சிறந்த லாபகரமான விவசாயத்தில் உளுந்தும் ஒன்று என தெரிவித்தனர்.

The post கந்தர்வகோட்டை பகுதியில் உளுந்து பிரித்து எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Gandharvakottai ,Kandarvakottai ,Pudukottai district ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...