- குடியரசு தினம்
- வேதாரண்யம்
- யூனியன் கமிட்டி
- ஜனாதிபதி
- கமலா அன்பழகன்
- வேதாரண்யம் பஞ்சாயத்து யூனியன்
- பஞ்சாயத்து யூனியன்
- ஆணையாளர்
- சரவணன்
- ராஜு
- குடியரசு தின கொண்டாட்டம்
- தின மலர்
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் தேசியக்கொடியனை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சரவணன், ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் வேதாரண்யம் நகராட்சியில் நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத்தலைவர் மங்கள்நாயகி உள்ளிட்ட நகராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். வேதாரண்யம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ திருமால், வேதாரண்யம் டிஎஸ்பி அலுவகத்தில் டிஎஸ்பி சுபாஷ் சந்திரபோஸ், வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திலகா, வேதாரணயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் காமராஜ், வேதாரண்யம் வர்த்தக சங்க கட்டிடத்தில் வர்த்தக சங்கத் தலைவர் தென்னரசு தேசிய கொடியினை ஏற்றி வைத்தனர். அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
The post வேதாரண்யம் பகுதியில் குடியரசு தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.