- காங்கிரஸ்
- தமிழ்நாடு கவர்னர்
- ஈரோடு
- காங்கிரஸ் கட்சி
- ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு
- திருச்செல்வம்
- மாவட்ட துணைத் தலைவர்
- ராஜேஷ் ராஜப்பா
- ஜனாதிபதி
- ஜாபர்
ஈரோடு, ஜன. 28: ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு அருகே மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார்.மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர் ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்தியாவிற்கு மகாத்மா காந்தி சுதந்திரம் பெற்று தரவில்லை, நேதாஜி தான் சுதந்திரம் பெற்று தந்தார் என மகாத்மா காந்தி குறித்து அவதூறு பரப்பியும்,
அவரது அகிம்சை போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஈபி ரவி, வழக்கறிஞர் பிரிவு மாநில துணை தலைவர் ராஜேந்திரன், நெசவாளர் அணி மாரிமுத்து, ஊடக பிரிவு தலைவர் முகமது அர்சத், மகிளா காங்கிரஸ் ஞானதீபம், நிர்வாகிகள் கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், ஈரோடு மூலப்பாளையத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், மகாத்மா காந்தி குறித்து அவதூறாக பேசியதற்கு அவரது பதவியை ராஜினாமா செய்யக் கோரி வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்ராஜா, வட்டார தலைவர்கள் ஈஸ்வரமூர்த்தி, ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தமிழக ஆளுநரை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.