×

மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பரிதாப பலி

குளித்தலை: வாழைத்தோட்டத்தில் மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலியானார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரகுமாரன் பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (42). இவர், கடந்த 25 ஆண்டுகளாக திம்மாச்சிபுரத்தில் உமாபதி என்பவருக்கு சொந்தமான வாழைதோட்டத்தில் கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வாழைக்கு தண்ணீர்பாய்ச்ச அருகில் உள்ள சுரேஷ் என்பவரின் வாழை தோட்டத்தில் உள்ள மின்மோட்டார் பெட்டியில் கைவைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Kuluthalai ,Marimuthu ,Veerakumaran Patti ,Kulithlai ,Karur ,Umapati ,Thimmachipuram ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு