×

பைக்குகள் மோதல்: 3 பேர் படுகாயம்

குளித்தலை: மேட்டுமருதூர் கல்லுப்பாலம் அருகே பைக் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (48). இவர், நேற்று முன்தினம் மகன், மகளுடன் குளித்தலை வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு கிளம்பினார். அவருடைய டிவிஎஸ் 50 வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேட்டுமருதூர் கல்லுப்பாலம் அருகே சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த பைக் மோதியது, இதில் காந்தி, ஸ்வர்ணா, தருண்ராஜ் 3 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பலத்தகாயமடைந்த ஸ்வர்ணா, திருச்சி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின்பேரில் விபத்துக்கு காரணமான கணேசபுரம் சுப்பரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த மணிமுத்து (20) மீது குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post பைக்குகள் மோதல்: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kuluthlai ,Kalluppalam, Mettumarudur ,Gandhi ,Mettu Marudur ,Kulithlai ,Karur district ,Dinakaran ,
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!