×

ஐ.ஆர்.இ.எல். ஆலை சார்பில் இலவச வேலைவாய்ப்பு தகுதி பயிற்சி

 

குளச்சல்,ஜன. 28 : மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். ஆலை நிறுவனம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐ.ஆர்.இ.எல். ஆலை நிறுவனம் சமூக பொறுப்பின் கீழ் இம்மாவட்டத்தை சார்ந்த பட்ட படிப்பில் அல்லது பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்ற வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் தகுதி பெறுவதற்கான பயிற்சியினை வருகின்ற 1.02.2024-லிருந்து இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது.

இந்த பயிற்சியை பெறுவதன் மூலம் அரசு துறையிலும் அல்லது தனியார் துறையிலும் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இப்பயிற்சியில் சேர்வதற்கான வயது வரம்பு 31.01.2024 அன்று பொது பிரிவினருக்கு 35 வயதிற்கு மிகாமலும், ஓபிசி பிரிவினருக்கு 38 வயதிற்கு மிகாமலும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இம்மாவட்டத்தில் உள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) லிமிடெட் நிறுவனம், மணவாளக்குறிச்சிக்கு வந்து தங்களது பெயரினை பதிவுசெய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது குறித்த விபரங்கள் அறிய பிரசாத் துணை பொது மேலாளர் (ஓய்வு,மனிதவள மேம்பாடு), அலைபேசி எண் 9790206375 அல்லது முதுநிலை மேலாளர் பினு(மனித வள மேம்பாடு), அலைபேசி எண் 9846767737-யை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஐ.ஆர்.இ.எல். ஆலை சார்பில் இலவச வேலைவாய்ப்பு தகுதி பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Manavalakurichi I.R.E.L. ,IREL ,Manavalakurichi ,Kanyakumari district ,I.R.E.L. ,Dinakaran ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது