×

பெண் போலீஸ் தற்கொலை

மதுரை: மதுரை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசிக்கும் ஆயுதப்படை கிரேடு 1 பெண் போலீஸ் சரண்யா(34). இவரது கணவர் பாலாஜி ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பத்திக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சரண்யாவும் பாலாஜியும் பிரிந்து வாழ்ந்தனர். இந்தநிலையில், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் சரண்யா சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த தல்லாகுளம் போலீசார் சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post பெண் போலீஸ் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Saranya ,Armed Forces Guard ,Quarters ,Balaji ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப்...