×

எடப்பாடியை முன்னிலைப்படுத்த தைரியம் இருக்கா? யாருக்கு ஒட்டு கேட்பதுனே தெரியாம அதிமுக இருக்கு: கே.பி.முனுசாமிக்கு பாஜ பதிலடி

கிருஷ்ணகிரி: எடப்பாடியை முன்னிலைப்படுத்த தைரியம் இருக்கா?. யாருக்கு ஒட்டு கேட்பதுனே தெரியாம அதிமுக இருக்கு… என்று கே.பி.முனுசாமிக்கு பாஜ பதிலடி தந்து உள்ளது. பாஜ மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்பி.யுமான நரசிம்மன் கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி மற்றும் அதிமுகவினர், யாருக்காக வாக்கு கேட்க போகிறார்கள்?. மோடியா, ராகுல்காந்தியா அல்லது வேறு யாரேனும் ஒருவருக்கா என்பதை அதிமுக விளக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவோம் என அதிமுகவினர் சிலர் கூறி வருகின்றனர். அப்படி என்றால் அதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? அதிமுகவில் சிலர் மோடியை எதிர்க்கின்றனர். சிலர் ஆதரிக்கின்றனர். ஒரு நிலைப்பாட்டை சரியாக எடுக்க வேண்டும். பாஜவை கொச்சைப்படுத்தி பேசவோ, மோடி மற்றும் அண்ணாமலை ஆகியோரை பற்றி பேசவோ, அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு நரசிம்மன் கூறினார்.

The post எடப்பாடியை முன்னிலைப்படுத்த தைரியம் இருக்கா? யாருக்கு ஒட்டு கேட்பதுனே தெரியாம அதிமுக இருக்கு: கே.பி.முனுசாமிக்கு பாஜ பதிலடி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,AIADMK ,BJP ,KP Munuswamy ,Krishnagiri ,KP ,Munusamy ,Narasimhan ,Dinakaran ,
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...