×

சர்ச்சைகளுக்கு மையமாக கவர்னர் இருப்பது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: தமிழகத்தில் பல சர்ச்சைகளுக்கு மையமாக கவர்னர் இருப்பது ஏன் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: 1857ல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம்.

இந்த பல்கலைக்கழகம் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் உள்ளது. கவர்னர்-அரசு இடையே ஏற்பட்டுள்ள நிலைப்பாடு தான் காரணம். தமிழகத்தில் பல சர்ச்சைகளுக்கு மையமாக தமிழக கவர்னர் இருப்பது ஏன்?. கவர்னர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர். உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சர்ச்சைகளுக்கு மையமாக கவர்னர் இருப்பது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : P. Chidambaram ,Chennai ,P Chidambaram ,Tamil Nadu ,Senior ,Congress ,Union Minister ,site ,India ,
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...