- பிரதம செயலாளர்
- ஷிவ் தாஸ் மீனா
- சென்னை
- சிவ்தாஸ் மீனா
- திருப்பத்தூர் கலெக்டர்
- பாஸ்கரா பாண்டியன்
- திருவண்ணாமலை சேகரிப்பாளர், தோட்டக்கலை
- கார்டன் கிராப்ஸ் கர்ப
சென்னை: 6 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவு: திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை கலெக்டராகவும், தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர் கழக இயக்குநர் பிருந்தா தேவி, சேலம் கலெக்டராகவும், உயர்கல்வித்துறை துணை செயலாளர் தற்பகராஜ், திருப்பத்தூர் கலெக்டராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கமல் கிஷோர் தென்காசி கலெக்டராகவும், மின்னணு கழக சிறப்பு இயக்குநர் அருண்ராஜ்,
செங்கல்பட்டு கலெக்டராகவும், வணிக வரித்துறை இணை ஆணையர் சுப்புலட்சுமி, வேலூர் கலெக்டராகவும், திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், வேளாண்துறை இயக்குநராகவும், வேலூர் கலெக்டர் குமரவேல் பாண்டியன், தோட்டக்கலைத்துறை இயக்குநராகவும், தென்காசி கலெக்டர் ரவிச்சந்திரன் உயர்கல்வித்துறை துணை செயலாளராகவும், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை முன்னாள் இயக்குநர் லட்சுமி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநராகவும், வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையர் பிரகாஷ், விவசாயத்துறை மார்க்கெட்டிங் பிரிவு ஆணையராகவும், அந்த பிரிவில் இருந்த நடராஜன், வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
The post தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு: 6 கலெக்டர்கள் உள்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் appeared first on Dinakaran.