×

20 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சார்ந்த கோடிலட்சம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த செந்தில்குமார் (30), விஜயகுமார் (20), முகிலன் (18), கணேசன் (50), ராமகிருஷ்ணன் (58) ஆகியோர் கடந்த 25ம் தேதி மதியம் கடலுக்கு சென்றனர்.

அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென வீசிய சூறாவளி காற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. இதையடுத்து அவர்கள் ஐஸ் பெட்டி, டீசல் கேன், ஆகியவற்றை பிடித்துக் கொண்டு சுமார் 20 மணி நேரம் கடலில் தத்தளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவ்வழியே மீன்பிடித்துக் கொண்டு கரைக்கு திரும்பிய புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் அவர்களை மீட்டு தங்கள் படகில் ஏற்றி நேற்று காலை கோடியக்கரை கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.

The post 20 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Senthilkumar ,Vijayakumar ,Mukilan ,Ganesan ,Ramakrishnan ,Kodilaksam ,Nagapattinam District, Nagapattinam ,Kodiyakarai ,
× RELATED வேளச்சேரியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!